Saturday, October 6, 2012

சுந்தரபாண்டியன் என்கின்ற உலக காவியம்

சுந்தரபாண்டியன் என்கின்ற சசிகுமார் நடித்த உலக மகா காவியத்தைப் பார்த்து தொலைத்தேன். முதல் 10 நிமிடங்களிலேயே குமட்டிக் கொண்டு வந்தது. டைட்டில் போடும்போதே மதுரையின் மகத்துவம் என்ற தலைப்பில் சசிக்குமார் பேசுகிறார். மதுரையில் நேதாஜிதான் தேசதந்தையாம். பிரபு மற்றும் கார்த்திக் மட்டும்தான் அபிமான நடிகர்களாம்.. (இருவருமே முக்குலத்தோர் என்று சொல்ல வேண்டியதில்லை).. ரொம்ப பாசக்காரங்களாம். ஆனால், கள்ளிக்காட்டில் கொலை செய்து நாய் நரிக்கு உணவாக போடுவார்களாம். படம் நடுவில் ஹிரோ என்ன இனம், இறந்து போகும் அப்புக்குட்டி என்ன சாதி என்பதெல்லாம் தெள்ள தெளிவாக நமக்கு விளக்கபடுகிறது. ஹிரோயினுக்கு திருமண நாள் தேதி பார்க்க ஒருத்தர் காலண்டரை எடுக்கிறார். அதில் தேவர் படம் போட்டிருக்கிறது. இந்த படத்திற்க்கு இது போன்ற காட்சிகள் என்ன பலத்தை கொடுக்கிறது? சாதியத்தை முன்னிறுத்தி இப்படி மானவாரியாக கொம்பு சீவி விடும் பொழப்பை எப்போது நிறுத்த போகிறார்கள், இந்த சினிமாகாரர்கள்?

அப்படி எல்லாம் நிறுத்திவிட முடியாது என்றால், உங்கள் படங்களை மதுரையில் மட்டும் ரிலிஸ் செய்து கல்லா கட்டிக் கொள்ளுங்கள்.மானஸ்தர்களே.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..