Tuesday, July 1, 2014

டாஸ்மாக் ஆபாசங்கள்

உலகிலேயே அசுத்தமான இடம், தமிழ்நாட்டின் டாஸ்மாக் பார் தான். குடிக்க வருபவர்களை, சாக்கடை பன்றிகள் போல் நினைத்தே, அப்படி பராமரிக்கபடுகிறது. குடிமகன்கள்,உள்ளே நுழைந்தவுடனேயே, துப்ப தொடங்கிவிடுகிறார்கள்.. காலுக்கு கிழேயே துப்பிக் கொண்டு, கவலையே படாமல் குடிக்கிறார்கள். அடுத்து வரும் நபர் அந்த எச்சிலின் மேலேயே, மேலும் துப்புகிறார்.. பீர், விஸ்கி என எல்லா பிராண்டுகளும் எப்போதும் பத்து ரூபாய் அதிகம் வைத்தே விற்கபடுகிறது. இந்த பணம் உள்ளூர் அளும்கட்சி நபர்களுக்கு போவதாக சொல்கிறார்கள்.. சைட் டிஸ் என்ற பெயரில், நாறிபோன, பொதுவாக வீட்டில் சமைக்காத, குடல், ஈரல் போன்ற அயிட்டங்களை, அழுகிய தக்காளி விட்டு வதக்கி, அழுக்கு பிசுப்பு ஏறி கிடக்கும் பிளாஸ்டிக் தட்டுகளில் கொண்டு வந்து வைக்கிறார்கள்..சராசரியாக ஒரு மணி நேரத்திற்க்கு ஒருவர் வாந்தி எடுக்கிறார். விளக்குமாறு கொண்டு, நான்கு முறை தேய்த்து விட்டு, மீண்டும் சேர் போடபடுகிறது. குடிப்பது குறித்து கேவலமான குற்ற உணர்வை இந்த பார்கள் தான் ஏற்படுத்துகின்றன. போதையுடன், கொலைசெய்தது போன்ற குற்ற உணர்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பும், நபர் மனைவி, பிள்ளைகளை அடித்து நொறுக்கி அமைதியடைகிறார்.. குடியை ஒழிக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, இப்படி குடிப்பவர்களை கேவலப்படுத்தி, அவர்களை மீளமுடியாத சாக்கடையில் தள்ளி, அவர்களது பையிலிருந்தே பிக்பாக்கெட் அடித்த பணத்தை கொண்டு, இலவசங்கள் தரப்படுகிறது..

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..